எண்டெமிக்.. எபிடெமிக்.. பாண்டமிக்.. அப்படினா என்னனு தெரியுமா..?! #COVID19pandemic

  • IndiaGlitz, [Thursday,March 12 2020]

இன்று உலக சுகாதார நிறுவனமானது கொரோனா வைரஸினை உலகமுழுக்க பரவியுள்ள பெருந்தொற்று நோயாக(pandemic) அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமானது உலகில் உருவாகும் நோய்களை எண்டெமிக், எபிடெமிக், பாண்டெமிக் என மூன்று வகையாக பிரித்து வைப்பது வழக்கமாகும்.

என்டெமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஏற்படும் தொற்று நோயாகும். மற்ற பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த பகுதிக்குச் சென்றால் அந்த நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். மற்றபடி அந்த நோய் வேறு பகுதிகளுக்கு பெரிதாக பரவியிருக்காது. எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்க பகுதிகளில் எப்போதும் பெரும் பிரச்சனையாக இருக்கும் மலேரியா. இது உலகின் வேறு பகுதிகளில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை.

அதேபோல் எபிடெமிக் என்பது பல மக்களை ஒரே நேரத்தில் தொற்றும் நோயை குறிப்பதாகும். அதே நேரம் இந்த வகை நோயானது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இருக்காமல் பல சமுதாய மக்களுக்கும் ஏற்படும். இதற்கு எடுத்துக்காட்டு சிக்கன்குனியா, காலரா, எபோலா போன்றவை ஆகும்.

பாண்டெமிக் என்பது எபிடெமிக் நோய் உலகம் முழுவதும் பரவியுள்ளதினைக் குறிக்கும். மிகச் சமீபமாக 2009ல் வந்த பன்றிக்காய்ச்சலானது பாண்டெமிக் வகை நோயாகவும் . இது உலகம் முழுவதும் பரவி இருந்தது. மேலும் பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதற்கு முன்னும் பல பாண்டெமிக் நோய்கள் பரவியுள்ளன. எயிட்ஸ் ஒரு பாண்டெமிக் நோயாகும். இது 2005 முதல் 2012 வரை உலகமுழுவதுமுள்ள மக்களிடையே மிக விரைவாக பரவியது. இதுவரை எயிட்ஸால் 7.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு 3 கோடியே 20 லட்சம் பேர் இறந்துள்ளனர். அதன் பிறகு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்றும் நம்மிடம் மருந்து இல்லை.

உலகமானது இது போல் பல பெருந்தொற்று நோய்களைக் கண்டுள்ளது. அதனால் பயம் தேவையில்லை. 1918-ல் H1N1 வைரஸால் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு உலகமுழுக்க பரவியது. கிட்டத்தட்ட 5 கோடி போர் அந்நோயால் இறந்தனர். 1957-ல் ஏசியன் ஃப்ளூ சிங்கப்பூரில் தொடங்கி உலகமுழுக்க பரவி 11 லட்சம் பேரை பலியாக்கியது. 1968-ல் ஹாங்காங் ஃப்ளூ இந்நோய் ஆசியா,ஐரோப்பா என பரவியது. வியட்நாமில் போருக்காக வந்த அமெரிக்க வீரர்கள் இதனால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிலும் இந்த நோய் பரவி உலகில் 5 லட்சம் பேர் இறந்தனர்.14ம் நூற்றாண்டில் வந்த பிளேக் நோய்க்கு 20 கோடி பேர் இறந்துள்ளார்கள். 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டிலும் பரவிய காலரா நோய்க்கு 18 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனமானது சில அறிவுரைகளை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளது. அவை,
1. உடனடியாக சிகிச்சை தரும் முறையை தரம் உயர்த்த வேண்டும்.
2. மக்களிடம் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள எடுத்துரைக்க வேண்டும்.
3. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு COVID19 தொற்று உள்ளவர்களை மிக தனிமைப்படுத்தி சோதனைக்கு உள்ளாகி சிகிச்சையளிக்க வேண்டும்.

More News

கொஞ்சம் இதையும் கவனிங்க... பிரதமருக்கு ராகுல் காந்தி கூறியிருக்கும் அறிவுரை!!!

முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு பா.ஜ.க வே காரண

தனிக்கட்சியெல்லாம் வேண்டாம்.. ரஜினி பாஜக-வில் சேர வேண்டும்..! பொன்.ராதாகிருஷ்ணன்.

ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே எங்கள் எல்லோரது விருப்பமாக இருக்கிறது. ஆனால் இந்த தருணத்தில் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக சொல்வது சரியாக இருக்காது

பயங்கரவாதத்தின் மத்தியில் மலர்ந்த ஜனநாயகக் குரல் பெனாசிர் பூட்டோ!!!

“ஒருநாள் கண்டிப்பாக சுட்டுக் கொல்லப் படுவோம்“ எனத் தெரிந்தே அரசியலில் பங்கேற்று, துப்பாக்கிக் குண்டுகளுக்கு இ

கொரோனா update.. இந்தியாவில் இன்று வரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா..?!

முதலில் 5 பேருக்கு மட்டுமே கோரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டது. அடுத்த நாளே அந்த எண்ணிக்கை 29 ஆனது. அதன்பிறகு 40.. இன்று 73ல் வந்து நிற்கிறது.

ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதன் முழு தொகுப்பு

என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும்‌, எனது ரசிகர்களுக்கும்‌, ஊடக நண்பர்களுக்கும்‌ எனது பணிவான வணக்கம்‌. கடந்த வாரம்‌ (மார்ச்‌ -5) சென்னையில்‌