close
Choose your channels

தமிழகத்திலும் நுழைந்த கொரோனா: காஞ்சிபுரம் நபருக்கு அறிகுறி என தகவல்

Sunday, March 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீனாவை அடுத்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா பரவிவிட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

ஏற்கனவே இந்தியாவில் 34 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் நேற்று ஓமனில் இருந்து சென்னைக்கு வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக செய்திகள் வெளியானது. 45 வயதாகும் இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்றும் தற்போது அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் இருந்து ஓமன் சென்ற இவர் தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மேலும் ஈரான் நாட்டிலிருந்து வந்த இரண்டு பேர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் இவர்கள் மூவரும் தற்போது தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் இந்தியாவில் மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் சோதனை மையங்கள் மற்றும் சிகிச்சை மையங்களை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது முதல் முதலாக ஒரு நபருக்கு ஒரு வைரஸ் தாக்கப்பட்ட உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.