மொபைல் போன், கம்யூட்டர்களையும் தாக்கும் கொரோனா வைரஸ்

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால் 200க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் மருத்துவர்கள் தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மனிதர்களுக்கு மட்டுமன்றி மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கும் கொரோனா என்ற பெயரில் வைரஸ் தாக்கி வரும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் ஏராளமானோர் இந்த வைரஸ் குறித்து பல தகவல்களை கூகுளில் தேடி வருகின்றனர். ஆனால் கூகுளில் கொரோனா வைரஸ் பெயரில் ஏராளமான போலி ஃபைல்கள் உலாவி வருவதாகவும் இந்த பைல்களை ஓபன் செய்தால் அதில் இருக்கும் வைரஸ்கள் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு பரவி விடும் என்றும் எனவே இத்தகைய போலி வைரஸ்கள் கொண்ட பைல்களை ஓபன் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஆன்டிவைரஸ் நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது அதே பெயரில் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களுக்கும் வைரஸ் மூலம் பரவி வருவது குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

டப்பிங் சங்க தேர்தல்: சின்மயி அணியில் இணைந்த நாசர்!

டப்பிங் யூனியன் சங்கத்திற்கு வரும் பிப்ரவரி 15ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ராதாரவி அணி மற்றும் சின்மயி தலைமையிலான

'நாடோடிகள் 2' படம் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு!

சசிகுமார், அஞ்சலி நடிப்பில் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய 'நாடோடிகள் 2' என்ற திரைப்படம் நேற்று வெளியாக இருந்த நிலையில் திடீரென

கௌதம் மேனனுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா! ஏன் தெரியுமா?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு 'மின்னலே' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்,

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகுமா?

ராஜாக்கள் காலத்து கதைகளில் மரண தண்டனை என்பது சர்வ சாதாரண விஷயமாக இருக்கும். தலையை வெட்டுவது

மீண்டும் ரஜினி படத்தில் இணைந்த நயன்தாரா: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 168' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்லது.