பிறந்த 30 மணி நேரத்தில் குழந்தையை தாக்கிய கொரோனா: சீனாவில் பரபரப்பு

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவைரஸ் பயங்கரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 500ஐ நெருங்கிவிட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு பிறந்து 30 மணி நேரமே ஆன குழந்தை ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தலைவிரித்தாடும் சீனாவில் வுகான் என்ற பகுதியில் சமீபத்தில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு கொரோனாவைரஸ் இருக்கிறதா? என்று சோதனை செய்யப்பட்டது. அந்த குழந்தை பிறந்து முப்பது மணி நேரமே ஆன நிலையில் அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர் தாயிடமிருந்து குழந்தைக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கர்ப்ப காலத்திலிருந்தே தாயிடமிருந்து குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி இருப்பதாகவும் தற்போது அந்த தாய்க்கும் குழந்தைக்கும் கொரோனா வைரஸ் குறித்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிறந்த 30 மணி நேரமே ஆன குழந்தைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது குறித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியாகிறது அமேசான் எஃகோ ஷோ 8..!

Amazon Echo Show 8 கடந்த ஆண்டு செப்டம்பரில் உலகளவில் எக்கோ-பிராண்டட் சாதனங்களான Echo Buds மற்றும் Echo Frames-களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

சூர்யாவின் 'சூரரை போற்று' படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்!

சூர்யா நடித்து முடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

சந்தானம் நடிக்கும் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

கடந்த ஆண்டு நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை இந்த ஆண்டு அவர் நடித்த 'டகால்டி' திரைப்படம் வெளிவந்து தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது

டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியின்றி ராதாரவி வெற்றி: சின்மயி மனு என்ன ஆச்சு?

டப்பிங் யூனியன் சங்கத்திற்கு நடைபெறும் தேர்தலில் ராதாரவி அணி மற்றும் சின்மயி தலைமையிலான ராமராஜ்யம் அணி ஆகிய இரண்டு பேர் போட்டியிட்ட நிலையில் ராதாரவி போட்டியின்றி

ஏஜிஎஸ்-ஐ அடுத்து விஜய் வீட்டிலும் ஐடி ரெய்டு: பரபரப்பில் கோலிவுட் திரையுலகம்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வந்தன.