கொத்தாக குவியும் சடலங்கள்...!உபியில் ஆற்றங்கரையில் நடக்கும் சோகம்....! தகரம் வைத்து மறைத்த அரசு...!

  • IndiaGlitz, [Thursday,April 15 2021]

உத்திரபிரதேச மாநிலம்,லக்னோவில், கோமதி ஆற்றங்கரையில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏராளமான சடலங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனாவின் 2-ஆவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு என்பது 8000-த்தையும் கடந்துள்ளது. வடமாநிலங்களில் தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையை குறைந்து காட்டுவதாக குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளது.
இந்தநிலையில் லக்னோ மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கொரோனா மற்றும் பிற நோய்களின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இறந்தவர்கள் உடலை எரிப்பதற்கு, உறவினர்கள் வெகுநேரம் காத்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இதுபற்றி பைகுந்தாம் பகுதி மயானத்தில் பணிபுரியும் முன்னா என்பவர் கூறியிருப்பதாவது,

கடந்த புதனன்று 14 நபர்கள் கொரோனாவால் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நான் 46 உடலைகளை அன்று எரித்தேன். இங்கு ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன், ஒரே நாளில் இத்தனை உடல்கள் எரிக்க வந்தது இதுவே முதன்முறை. சென்ற ஒரு வாரத்தில் மட்டும் பைகுந்த் தாம் இடுகாடு மற்றும் குலாலா காட்டில் 400 உடல்கள் எரியூட்டப்பட்டது. இதில் கொரோனாவால் இறந்தவர்களில் 124 பேர் அடங்குவர், 276 மரணங்கள் எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை என முன்னா கூறுகிறார்.

கோமதி ஆற்றங்கரையில் அருகில் இருக்கும் பைன்சாகுந்த் இடுகாட்டில், நேற்று ஏராளமான உடல்கள் எரிக்கப்பட்டதால் அங்கு தீ ஜுவாலைகள் போல் காணப்பட்டது. மேலும் ஒரே நேரத்தில் அதிகப்படியான சடலங்களை எரிப்பதால், மக்களை வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிணங்கள் எரிப்பதை பொதுமக்கள் யாரும் பார்க்காமல் இருக்க, அரசு சார்பில் அப்பகுதியில் தகரங்கள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் பாஜக ஆளுமையிலே, இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளதால் எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அந்நியன் தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுக்கு ஷங்கர் அளித்த பதில்!

இயக்குநர் ஷங்கர் கடந்த 2005ஆம் ஆண்டு இயக்கிய 'அந்நியன்' திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்

மீண்டும் உதவிகளை ஆரம்பித்துவிட்ட சோனுசூட்: இந்த முறை என்ன உதவி தெரியுமா?

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சகட்டத்தில் இருந்தபோது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உதவிகளை செய்தவர் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே

'த்ரிஷ்யம் 2' படத்தில் மீண்டும் இணையும் மீனா-நதியா: வைரல் புகைப்படம்

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகமான 'த்ரிஷ்யம் 2' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்த இனியாவா இது? உச்சகட்ட கிளாமர் போட்டோஷூட்

தமிழ் திரையுலக நாயகிகளில் ஒருவராகிய இனியாவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் கிளாமரின் உச்ச கட்டத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிக்பாஸ் பிரபலங்களான பாலாஜி-சம்யுக்தா ஆடிய வேற லெவல் நடனம்! வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான பாலாஜி மற்றும் சம்யுக்தா ஆடிய நடனம் வீடியோ ஒன்று வேற லெவலில் வைரலாகி வருகிறது