close
Choose your channels

கொரோனாவால் சீரழிந்த கூட்டுக்குடும்பம்!!! 18 பேர் பாதிப்பு மற்றும் தொடரும் அவலம்!!!

Wednesday, July 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவால் சீரழிந்த கூட்டுக்குடும்பம்!!! 18 பேர் பாதிப்பு மற்றும் தொடரும் அவலம்!!!

 

மகாராஷ்டிர மாநிலம் பூனே அடுத்த பிரிம்பிஹான் என்ற பகுதியில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இப்பகுதியில் 3 சகோதரர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். அந்த 3 சகோதரர்களுக்கும் மனைவி, மகன், மகள் என ஒட்டுமொத்தமாக அக்குடும்பத்தில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். முதன் முதலாக அக்குடும்பத்தில் உள்ள ஒரு வாலிபருக்கு ஜுலை 5 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. அதையடுத்து அக்குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டபோது அனைவருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்ததுள்ளது.

பூனே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத்தவிர நோய் பாதித்த 9 நாட்களுக்குள் அக்குடும்பத்தின் தலைவர்கள் அனைவரும் கொரோனா நோய்த் தாக்கத்தால் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நோய் பாதித்த உடனே அனைவரும் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். ஆனாலும் நோயின் தீவிரத் தன்மையால் முதலில் கடைசி தம்பி திலீப்ராப் கல்ப்பீயூர் (61) ஜுலை 10 ஆம் தேதி உயிரிழந்து உள்ளார். அடுத்து இரண்டாவது தம்பி டைனேஸ்வர் கல்ப்பீயூர் (63) ஜுலை 15 ஆம் தேதி உயிரிழந்தார். அடுத்து குடும்பத்தின் முதல் சகோதரரர் போபட்ராவ் கல்ப்பீயூர் (66) ஜுலை 18 ஆம் தேதி உயிரிழந்து உள்ளார்.

குடும்பத்தின் 3 சகோதரர்களும் கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழந்து உள்ளனர். தற்போது மற்றவர்கள் சிகிச்சை எடுத்து வருகின்றனர். என்றாலும் குடும்பத் தலைவர்கள் கொரோனாவால் உயிரிழந்த சோகம் அவர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது 12 லட்சத்தை நெருக்க இருக்கும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கும் சமயத்தில் ஒரே குடும்பத்தில் 18 பேருக்கு பாதிப்பு அதில் 3 பேர் உயிரிழப்பு என்ற செய்தி நாட்டையே உலுக்கும் விதத்தில் அமைந்திருப்பதைக் குறித்து அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.