close
Choose your channels

மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த காதல் தம்பதி திடீர் தற்கொலை: அதிர்ச்சி காரணம்?

Wednesday, December 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த தம்பதிகள் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மகாவைகுண்டம் என்பவர் கரிசூல்தால் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தம்பதிகள் நாகர்கோவில் அருகே வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

காதலித்து திருமணம் செய்ததால் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாலும் அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லை என்ற ஏக்கம் கடந்த சில மாதங்களாக இருந்துள்ளது. பல கோவில்களுக்கு சென்று வேண்டியும் மருத்துவமனைகளில் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொண்டும் இவர்களுக்கு குழந்தை பிறக்காததால் ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று மகா வைகுண்டம் கரிசூல்தால் தம்பதியினரின் வீடு நேற்று நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததால் சந்தேகப்பட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திறந்து பார்த்தபோது உள்ளே இருவரும் இறந்து கிடந்தனர். அருகில் விஷ பாட்டில் இருந்தது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த முதல்கட்ட விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.