close
Choose your channels

சூர்யா உள்பட 8 நடிகர்கள் மீதான வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Wednesday, July 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2009ஆம் ஆண்டு முன்னணி தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியான செய்தி காரணமாக நடிகர் சங்கம் சார்பில் கண்டனக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அன்றைய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், சூர்யா, சரத்குமார், விவேக், அருண் விஜயகுமார், விஜயகுமார், சேரன், ஸ்ரீப்ரியா, சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரோசாரியோ மரியசூசை என்ற பத்திரிக்கையாளர் உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணையில் ஆஜாராகாத சூர்யா உள்பட 8 நடிகர்களுக்கு உதகை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

ஆனால் இந்த பிடிவாரண்டுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர்கள் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று சூர்யா உள்பட 8 நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து சூர்யா உள்பட 8 நடிகர்களும் விடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.