பெனாசிர் பூட்டோ வழக்கில் திடீர் திருப்பம்: பர்வேஸ் முஷரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,September 01 2017]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை நடந்து பத்து வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று வழங்கிய நீதிபதி அஸ்கார், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இந்த வழக்கின் தேடப்படும் குற்றவாளி என்றும் அறிவித்தார். மேலும் பாகிஸ்தானில் முஷரப்புக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். முஷரப் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானை விட்டு வெளியேறி தற்போது துபாயில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வழக்கில் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இரண்டு காவல்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்த படுகொலை நிகழ்ந்ததாகவும், அவர்கள் இருவருக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிப்பதாகவும் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

More News

நீங்கள்தான் எங்கள் நிரந்தர கேப்டன்: தோனிக்கு விராத் புகழாரம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி இந்திய அணியின் அபார வெற்றி மட்டுமின்றி மேலும் ஒரு சிறப்பை பெற்றுள்ளது...

ரஜினியின் 'காலா' படப்பிடிப்பு இன்று முதல் திடீர் ரத்து

ஃபெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் ரஜினியின் 'காலா' உள்ளிட்ட சுமார் 40 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது....

விமலுக்கு திருப்புமுனை ஏற்படுத்துவரா ஓவியா?

நடிகர் விமல் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து கூறினர்...

புளூவேல் அட்மின் கைது! முடங்குமா ஆபத்தான விளையாட்டு?

உலகையே ஆட்டிப்படைத்து வந்த ஆன்லைன் விளையாட்டான புளுவேல் விளையாட்டின் அட்மின் ரஷ்ய போலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

முதல்வரை சந்திக்கின்றார் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அதிரடி அரசியல் கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.