close
Choose your channels

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி… வெளியான முக்கியத் தகவல்!

Thursday, August 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் 18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆய்வினை பாரத் பயோடெக் நிறுவம் மற்றும் ஜைடஸ் நிறுவனம் இரண்டும் இணைந்து நடத்தி வருகின்றன.

அந்த வகையில் உலகிலேயே இல்லாத அளவில், இந்தியாவில் முதல் முறையாக 2 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் பாரத்பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்த முழுமையான அறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் இதனால் அடுத்த மாதம் முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலத்தப்படும் என்றும் தேசிய வைராலஜி மையத்தின் இயக்குநர் பிரியா ஆப்ரஹாம் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து கோவேக்சின் மற்றும் ஜைகோவ்-D மருந்தின் மீதான ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் கோவேக்சின் 525 குழந்தைகளிடமும் ஜைகோவ்-D ஆயிரம் குழந்தைகளிடமும் பரிசோதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சோதனையில் நேர்மறையான முடிவுகள் எட்டப்பட்டு இருப்பதாகவும் வரும் செப்டம்பர் முதல் இந்தியாவில் 2-18 வயதுடைய குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும் என்று ஐசிஎம்ஆர் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.