2 மணி நேரத்திற்குதான் ஆக்சிஜன் தாங்கும்… மருத்துவமனை வெளியிட்ட பகீர் தகவல்!

  • IndiaGlitz, [Friday,April 23 2021]

கொரோனாவின் இரண்டாம் அலை தொற்றால் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. மேலும் இந்த மாநிலங்களில் படுக்கை வசதியைத் தவிர ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள முக்கிய மருத்துவமனையான சர் கங்கா ராம் மருத்துவமனை இயக்குநர் வெளியிட்டு உள்ள ஒரு அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் இந்த மருத்துவமனையில் மட்டும் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 2 மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. இதனால் சிகிச்சை பெற்றுவரும் 60 பேர் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது என அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த அறிக்கைக்கு முன்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்டு உள்ள தீர்ப்பு ஒன்றில் யாரிடம் பிச்சை எடுத்தாவது, கடன் வாங்கியாவது மருத்துவமனைகளில் ஏற்பட்டு இருக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குங்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பதிலடி கொடுத்து இருந்தது. இதையடுத்து தற்போது ஆக்சிஜன் இறக்குமதி செய்வதற்கான டெண்டரை வழங்குமாறு மத்திய அரசு உரிய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் போதிய சிகிச்சை இல்லாமல் உயிரிழந்து உள்ளனர். மேலும் ஆக்சிஜன் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வென்டிலேட்டர்கள் மற்றும் பிபப் கருவிகள் முழுமையாக செயல்படவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டும் என அதன் இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த தகவலை அடுத்து கொரோனா நோயாளிகளிடம் கடும் பீதி ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனாவில் இருந்து மீண்ட ரியல் ஹீரோவான வில்லன் நடிகர்!

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் இந்தியாவில் உச்சத்தில் இருந்தபோது புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் ஏராளமான பொதுமக்களுக்கும் உதவி செய்த பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்

உலக நாயகனாக இருந்தாலும் கமல் முட்டாள் தான்: எச்.ராஜா

பாஜக பிரமுகர் எச் ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பெரியாரைப் பின்பற்றும் கமல்ஹாசன் உலக நாயகனாக சினிமாவில் இருந்தாலும் முட்டாள்

'குக் வித் கோமாளி' அஸ்வினின் வேற லெவல் புதிய லுக்!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி முடிவடைந்தது என்பதும், இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே

என்ன ஒரு தெய்வீக சிரிப்பு: சதீஷை கலாய்த்த பிரபல நடிகை!

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் சதீஷ் நாயகனாக நடிக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

சிம்புவின் 'மாநாடு' படத்தின் சுப்பர் அப்டேட்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும்