கொரோனா நோயாளிகளைத் துரத்தும் இன்னொரு அதிபயங்கரம்… அதிர்ச்சி தகவல்!!!

  • IndiaGlitz, [Tuesday,September 29 2020]

 

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பல உடல் உறுப்புகள் பாதிப்பு அடைவதை ஏற்கனவே மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் அவர்களுக்கு அதிபயங்கரமான கனவுகள் வருவதாகவும் அதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா நோயால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் மனநிலை முன்பு இருந்ததைவிட தற்போது பல மடங்கு அசாதாரணமாகக் காணப்படுவதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவின் மனநல நிபுணர்கள் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் இத்தகைய முடிவுகள் எட்டப் பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த 2,888 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் முன்பு இருந்ததைவிட பல மடங்கு அழுத்தமான மனநிலைக் கொண்டவர்களாக மாறியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு அதிபயங்கரமாக கனவுகள் வருவதாகவும் அதன் அளவு முன்பு இருந்ததைவிட பல மடங்கு அதிகமானது என்றும் கூறப்படுகிறது. சொந்தங்களால் கை விடப்படுதல், வேலை இழப்பு, பண இழப்பு மற்றும் வைரஸின் அதிக பாதிப்பு போன்றவை சம்பந்தமாக மோசமான கனவுகள் வருவதாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் பெண்களைப் பொறுத்த வரையில் இந்த அளவு மேலும் அதிகமாக இருப்பதாகவும் கருத்துக் கூறப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

More News

கடலூரில் அடித்து நவுத்திய பேய்மழை… மின்னல் தாக்கி அக்கா-தம்பி இருவரும் உயிரிழந்த பரிதாபம்!!!

கடலூரில் நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்களா? லீக்கான இறுதி பட்டியல்!

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் நான்காம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டது.

3 வயது குழந்தைக்கு பேய்ப்பிடித்து இருப்பதாக் கூறி அடித்தே கொன்ற பூசாரி!!! கொடூரச் சம்பவம்!!!

21 ஆம் நூற்றாண்டிலும் உடல்நிலை சரியில்லாமல் போனால் அதற்கு பேய்தான் காரணம் என நம்பும் பழக்கம் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது.

13 நாட்களில் அடுத்த படத்தின் கதை ரெடி: பிரபல இயக்குனர் தகவல் 

பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் நடித்த 'அழகி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'சொல்ல மறந்த கதை', 'தென்றல்', 'பள்ளிக்கூடம்', 'ஒன்பது ரூபாய் நோட்டு'

வலிமை படத்தில் மாற்றம் செய்ய சொன்ன அஜித்: 'விஸ்வாசம்' காரணமா? 

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் ஒரு ஜனரஞ்சகமான மசாலா திரைப்படம் என்றாலும் அந்த படத்தில் இடம்பெற்ற சென்டிமென்ட் காட்சிகள் பெரும்பாலானோரை கவர்ந்தது.