close
Choose your channels

வாழ்க்கையில் இந்த கனவு மட்டும் நடக்கவே இல்லை… வருந்தும் சச்சின்!

Monday, May 31, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய சாதனைக்கு அளவே இல்லை எனும் அளவிற்கு சர்வதேச வீரர்கள் பலரும் அவரை ரோல்மாடலாக கொண்டாடி வருகின்றனர். அதோடு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக வலம் வருகிறார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய வாழ்க்கையில் நிறைவேறாக இரண்டு கனவுகளைக் குறித்து நேற்று அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கருடன் இணைந்து நான் ஒரு போதும் விளையாடியதில்லை. இளம் வயதில் அவர்தான் எனது பேட்டிங் ஹீரோ. நான் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிப்பதற்கு 2 ஆண்டுக்கு முன்பாக அவர் ஓய்வு பெற்று விட்டார். இதனால் அணியில் ஒரு வீரராக அவருடன் இணைந்து ஆட முடியவில்லை என்ற ஏக்கம் எப்போதும் உண்டு.

அதேபோல எனக்கு இன்னொரு வருத்தமும் உண்டு. எனது சிறு வயது நாயகன் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்சுக்கு எதிராக விளையாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனதுதான். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதிராக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியிருந்தேன். ஆனால் சர்வதேச களத்தில் அவரை எதிர்த்து விளையாட முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் இன்னும் உண்டு.

இத்தனைக்கும் நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்துதான் விவியன் ரிச்சர்ட்ஸ் (1991ஆம் ஆண்டில்) ஓய்வு பெற்றார். ஆனால் சில ஆண்டுகள் இந்தியாவும் வெஸ்ட் இண்டீசும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளாததால் அவரை களத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது” எனக் கூறியுள்ளார். சச்சினின் இந்தக் கருத்துகள் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிதும் கவனம் பெற்று இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.