close
Choose your channels

டி 20 உலகக்கோப்பை போட்டிக்கு பின் பிரபல கிரிக்கெட் வீரர் பாலியல் வழக்கில் கைது!

Sunday, November 6, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலியல் புகார் காரணமாக பிரபல கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியின் பல வெற்றிக்கு பங்களிப்பாக இருந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்காக தனுஷ்கா குணதிலகா விளையாடி வருகிறார். இந்த நிலையில் நேற்று சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. 

இந்த போட்டி முடிந்த பின்னர் தனுஷ்கா குணதிலகாவை சிட்னி போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிட்னி போலீசார் கூறியபோது, ‘இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா 29 வயது பெண் ஒருவருடன் பழகியதாகவும், இருவரும் ஓட்டலில் சந்தித்து பேசியபோது அந்தப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தோல்வி காரணமாக இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாததால் நேற்று இலங்கை அணி நாடு திரும்பியது. ஆனால் தனுஷ்கா குணதிலகா மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.