close
Choose your channels

கமல் மீது டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு: கிரிமினல் நடவடிக்கை எடுக்க மனு

Tuesday, May 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சேனா அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கமல் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் கமல் மீது கிரிமினல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை மறுநாள் அதாவது மே 16-ம் தேதி விசாரணை செய்யப்படவுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.