close
Choose your channels

ரொனால்டோவிற்கு இரட்டை குழந்தை… வைரலான சோஷியல் மீடியா பதிவு!

Friday, October 29, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கால்பந்து உலகின் ஜாம்பவனாகக் கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் இருவரும் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தத் தகவலை அடுத்து ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

36 வயதான ரொனால்டோ போர்ச்சுகல் நாட்டு கால்பந்து அணிக்கு கேப்டனாகவும் அதேநேரத்தில் மான்சென்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலும் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். இவருக்கு உலகம் முழுக்கவே ஏராளாமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்பானிஸ்-அர்ஜென்டினா மாடலான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் (27) என்பவருடன் இவர் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

ரொனால்டோ- ஜார்ஜினா ஜோடிக்கு அலெனா, ஈவா, மேடியோ என்று 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களைத் தவிர ஏற்கனவே ரொனால்டோவிற்கு இருந்த உறவுமூலம் பிறந்த மூத்தமகன் கிறிஸ்டியானோ ஜுனியர் என மொத்தம் 4 குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஜார்ஜினா கர்ப்பம் ஆகியிருப்பதாகவும் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க இருப்பதாகவும் ரொனால்டோ தனது இன்ஸடாவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் “நாங்கள் இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்க்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் இதயங்கள் அன்பால் நிறைந்துள்ளன- உங்களைச் சந்திக்க நாங்கள் காத்திருக்க முடியாது” எனப் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவையடுத்து ரொனால்டோ- ஜார்ஜினா ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.