close
Choose your channels

ரொனால்டோவிற்கு கொரோனா பாதிப்பு: நாளை முக்கிய போட்டியில் ஆடவிருந்த நிலையில் அதிர்ச்சி

Tuesday, October 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் உலக அளவில் பல விவிஐபிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் போர்ச்சுகல் அணியின் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

இன்று போர்ச்சுகல் அணியின் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ரொனால்டோவிற்கு கொரோனா பாசிட்டிவ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போர்ச்சுகல் தேசிய லீக் போட்டிகளில் ரொனால்டோ ஆட இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தொடரில் இருந்து ரொனால்டோ விலகி உள்ளார். அந்நாட்டின் சட்டப்படி அவர் 15 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

ரொனோல்டாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் போர்ச்சுகல் அணியில் வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் நாளை திட்டமிட்டபடி ஸ்வீடன் அணிக்கும் போர்ச்சுகல் அணிக்கும் இடையில் கால் பந்து போட்டி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.