close
Choose your channels

கோக் பாட்டிலை ஒதுக்கிய தலைவன் கிறிஸ்டியானோ… பொறுப்புணர்வுக்கு குவியும் வாழ்த்து!

Tuesday, June 15, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்துவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தனக்கு முன்னால் வைக்கப்பட்டு இருந்த கோக் பாட்டில்களைப் பொறுப்புணர்வோடு அகற்றினார். அதோடு அடைக்கப்பட்ட குளிர்பானங்களுக்குப் பதிலாகத் தண்ணீரைக் குடிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

கிறிஸ்டியானோ செய்த இந்தச் செயல் தற்போது சோஷியல் மீடியாவில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை குவித்த முதல் வீரர் என்ற பெயரை சமீபத்தில் பெற்ற கிறிஸ்டியானோ வொர்க் அவுட் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் அதிக அக்கறைக் கொண்டவர். அதோடு அவர் தேர்வு செய்து நடிக்கும் விளம்பரப் படங்களில் கூட பொறுப்புணர்வோடு நடந்து கொள்வார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது கிறிஸ்டியானோ கோக் பாட்டில்களை அகற்றிய சம்பவம் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும் இந்தப் பானங்களுக்குப் பதிலாக தண்ணீரைக் குடிங்கள் என கிறிஸ்டியானோ கேட்டுக் கொண்டது குறித்தும் நெட்டிசன்கள் உணர்ச்சிப் பொங்க மெச்சி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.