கோக் பாட்டிலை ஒதுக்கிய தலைவன் கிறிஸ்டியானோ… பொறுப்புணர்வுக்கு குவியும் வாழ்த்து!

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்துவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தனக்கு முன்னால் வைக்கப்பட்டு இருந்த கோக் பாட்டில்களைப் பொறுப்புணர்வோடு அகற்றினார். அதோடு அடைக்கப்பட்ட குளிர்பானங்களுக்குப் பதிலாகத் தண்ணீரைக் குடிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

கிறிஸ்டியானோ செய்த இந்தச் செயல் தற்போது சோஷியல் மீடியாவில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை குவித்த முதல் வீரர் என்ற பெயரை சமீபத்தில் பெற்ற கிறிஸ்டியானோ வொர்க் அவுட் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் அதிக அக்கறைக் கொண்டவர். அதோடு அவர் தேர்வு செய்து நடிக்கும் விளம்பரப் படங்களில் கூட பொறுப்புணர்வோடு நடந்து கொள்வார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது கிறிஸ்டியானோ கோக் பாட்டில்களை அகற்றிய சம்பவம் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும் இந்தப் பானங்களுக்குப் பதிலாக தண்ணீரைக் குடிங்கள் என கிறிஸ்டியானோ கேட்டுக் கொண்டது குறித்தும் நெட்டிசன்கள் உணர்ச்சிப் பொங்க மெச்சி வருகின்றனர்.

More News

190 நாடுகளில் இத்தனை மொழிகளில் வெளியாகிறதா தனுஷின் 'ஜகமே தந்திரம்'?

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜனவரி 18-ஆம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ்

லுக்அவுட் நோட்டீஸ் உடன் டேராடூன் விரைந்த சிபிசிஐடி… கிடுக்குப்பிடியில் சிவசங்கர் பாபா!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தப் புகாரில் சிவசங்கர் பாபா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம்,

நடிகை கைரா அத்வானி எடுத்த உச்சகட்ட ரிஸ்க்: வைரல் வீடியோ

தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கைரா அத்வானி எடுத்த உச்சகட்ட ரிஸ்க் ஒன்றின் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது

தமிழக முதல்வரை சந்தித்த விஜய்சேதுபதி: காரணம் இதுதான்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சற்று முன்னர் தலைமைச் செயலகத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சந்தித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சகோதரி கணவருடன் கள்ளத்தொடர்பு: ஷில்பா ஷெட்டி கணவர் கூறிய அதிர்ச்சி தகவல்!

தனது சகோதரியின் கணவருடன் தனது முன்னாள் மனைவி கள்ளத்தொடர்பு இருந்ததால்தான் அதிர்ச்சி அடைந்து அவரை விவாகரத்து செய்ததாக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கூறியிருப்பது