ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்த ரொனால்டோ… வைரலாகும் காட்சிகள்!

நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணி தோல்வியடைந்ததும் கோபத்தில் தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

போர்ச்சுகல் அணி கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். 16 அணிகள் கொண்ட இந்தத் தொடரின் லீக் போட்டி நேற்று அல்-இத்திஹாத் மற்றும் அல்-நாசர் அணிக்கு இடையே நடைபெற்றது. இதில் அல்-நாசர் அணியில் இடம்பெற்று விளையாடிவரும் ரொனால்டோவின் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

நேற்றைய போட்டியில் 79 நிமிடங்கள் வரை இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. ஆனால் 80 ஆவது நிமிடத்தில் அல்-இத்திஹாத் அணியைச் சேர்ந்த வீரர் ரோமரினோ இலாவகமாக ஒரு கோலை அடித்து அணியை முன்னுக்கு கொண்டுவந்தார். இந்நிலையில் அல்-நாசர் அணிக்கு கிடைத்த கூடுதல் நேரத்தைப் பயன்படுத்தி ரொனால்டோ கோல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் அல்-இத்திஹாத் அணியின் கோல் கீப்பரான மார்செலோ அவரது முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். இதனால் அல்-நாசர் அணி 0-1 என்ற கணக்கில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அல்-இத்திஹாத் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறியது.

இந்நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறிய கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கு வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டில்களைத் தனது காலால் எட்டி உதைத்தார். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்தப் போட்டி குறித்து டிவிட்டரில் கருத்துப் பதிவிட்ட ரொனால்டோ “முடிவு ஏமாற்றம். ஆனால் நாங்கள் எங்கள் சீசன் மற்றும் வரவிருக்கும் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவோம். உங்கள் ஆதரவிற்கும் அல்-நாசர் ரசிகர்களுக்கு நன்றி. நாங்கள் உங்களது நம்பிக்கையை நினைவுகூர்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

More News

இன்பநிதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி.. பிரத்யேக பேட்டி..!

நடிகர் தயாரிப்பாளர் மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இன்ப நிதியின் புகைப்படம் வெளியாகி ஏற்படுத்திய சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசி

'காத்துவாக்குல ரெண்டு காதல்': 2 பெண்களுடன் ஒரே நாளில் திருமண செய்த இளைஞர்..!

 தெலுங்கானா மாநிலத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் காத்து வாக்குல ரெண்டு காதல் என நெட்டிசன்களை விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

டிஜே பிளாக்கின் அடுத்தகட்ட வளர்ச்சி.. மாகாபா, ப்ரியங்கா நேரில் வாழ்த்து..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி உட்பட பல நிகழ்ச்சிகளில் டிஜே பிளாக்கின் பணி மிகவும் சிறந்தது என்பதும் அவருக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன என்பது

விஜய்யின் 'லியோ' படத்தின் மாஸ் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட வீடியோ..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் 'லியோ' படத்தின் தொடர் அப்டேட் விரைவில் வெளிவரும் என்று

'அவர் பாட்ஷா மாதிரி, அவருக்கு இன்னொரு முகம் இருக்கு: தமிழக அமைச்சர் குறித்து ரஜினிகாந்த்..!

அவர் பாட்ஷா மாதிரி, அவருக்கு இன்னொரு முகம் இருக்குது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக அமைச்சர் ஒருவர் குறித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.