close
Choose your channels

இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லையா? தோனிக்கு குவியும் கண்டனம்

Tuesday, October 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என தோனி கூறியதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது. இந்த ஐபிஎல் தொடரில் முதலில் பேட்டிங் செய்து மிகக்குறைந்த ரன்கள் எடுத்து அணி என்ற மோசமான சாதனையை நேற்று சிஎஸ்கே பதிவு செய்தது. 20 ஓவர்களில் வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக 4 விக்கெட் விழுந்த பிறகு தோனி மற்றும் ஜடேஜா கடைசிவரை ஆமை வேகத்தில் விளையாடினார்கள் என்பதும் கடைசி ஓவரில் களமிறங்கிய கேதார் ஜாதவ் வழக்கம்போல் சொதப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தோனியின் அணி தேர்வை சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கெய்க்வாட், ஜெகதீசன். சான்ட்னர் போன்ற இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கும் நிலையில் மோசமாக ஃபெர்பாம் செய்யும் பியூஸ் சாவ்லா, கேதார் ஜாதவ் ஆகியோர்களுக்கு தொடர்ந்து தோனி வாய்ப்பு தந்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்று களமிறக்கப்பட்ட ஹாசில்வுட் பவுலிங்கில் பட்டையை கிளப்பியதுபோல் மற்ற இளைஞர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று தோனி கூறிய போது ’இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை அதனால்தான் அனுபவமுள்ள வீரர்களை தேர்வு செய்ததாக கூறினார். இதற்கு தோனியின் ரசிகர்களே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் அவர்கள் கூறியபோது ’ஜெகதீசனிடம் இடமில்லாத ஸ்பார்க்கையா கேதார் ஜாதவ், பியூஸ் சாவ்லா ஆகியோர்களிடம் தோனி பார்த்துவிட்டார். இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று தோனி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.