விசில் போடு! சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி!

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகளும் துபாய் சென்று அடைந்தன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திடுக்கிடும் தகவலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஒருவர் உள்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக வெளிவந்த தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே சொந்த சோகம் காரணமாக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பியுள்ளார் என்பதும் அவர் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம் என்று கருதப்பட்டது.  

இந்த நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு கடந்த வாரம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் உள்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி 13 பேருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் வெளியானது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் ‘விசில் போடு’ என்று கூறி மகிழ்ச்சியில் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெறும் 5 நாட்களிலேயே நெகட்டிவ் ரிசல்ட் வந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்று கிரிக்கெட் விமர்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More News

திருச்சியில் தேர்வு எழுத வந்த தனுஷ் பட நாயகி: செல்பி எடுத்து குவித்த ரசிகர்கள்

திருச்சியில் தேர்வு எழுத வந்த தனுஷ் பட நாயகியை சுற்றி வளைத்த சக தேர்வர்கள் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கல்லூரி மாணவியின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட பேராசிரியர்: பரிதாபமாக பலியான உயிர்!

ஒடிசாவில் கல்லூரி மாணவி ஒருவரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது பேராசிரியரே வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கொரோனாவில் இருந்து குணமான விஜய் பட நாயகியின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த 'சச்சின்' 'வேலாயுதம்' உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா

பிக்பாஸ் ரைசா அடுத்த படத்தில் கனெக்சன் ஆன 'மாஸ்டர்' லோகேஷ் கனகராஜ்

தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'திருடன் போலீஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரான இயக்குனர் கார்த்திக் ராஜூ, தற்போது 'சூர்ப்பனகை

சுரேஷ் ரெய்னா வீட்டில் நடந்த சோகம்: நடிகர் சூர்யாவின் ஆறுதல்

சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையிலிருந்து ஐபிஎல் போட்டியில் விளையாட துபாய் சென்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான