2021 ஐ.பி.எல் போட்டி… சிஎஸ்கேவின் கேப்டன் யார்??? பரபரப்பு தகவல்!!!

 

தற்போது நடைபெற்று வரும் 2020 ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி “பிளே- ஆப்” சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் யார்? கேப்டன் டோனி விளையாடுவாரா? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தல டோனி அவர்களே வழிநடத்துவார் என எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து, “2021 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டோனியே வழிநடத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன். சென்னை அணிக்காக அவர் 3 முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார்.

முதன் முதலாக இந்த சீசனில் “பிளே-ஆப்” சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஆனாலும் நாங்கள் செய்த சாதனையை வேறு எந்த அணியும் செய்ததில்லை. ஒரு மோசமான ஆண்டுக்காக எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. இந்த ஆண்டில் நாங்கள் எங்களது திறமைக்கு தகுந்தபடி விளையாடவில்லை. வெற்றி பெற்றிருக்க வேண்டிய சில ஆட்டங்களில் தோற்று விட்டோம். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோரின் விலகல் அணியின் சரிசம கலவையை பாதித்து விட்டது” எனத் தெரிவித்து இருக்கிறார்.