close
Choose your channels

சிஎஸ்கே கேப்டன் தோனியா? ஜடேஜாவா? ரசிகர்களைப் பயமுறுத்தும் புது கேள்வி!

Saturday, January 29, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான ஏலம் அடுத்த மாதம் 12,13 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான வீரர்களை வீரர்களைத் தேர்வு செய்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தல தோனியும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை 12 கோடிக்கு தக்கவைத்துவிட்டு ரவீந்திர ஜடேஜாவையை 16 கோடிக்கு தக்கவைத்துள்ளச் சம்பவம் மீண்டும் ரசிகர்களிடைய குழந்தைப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு ஜடேஜாதான் கேப்டனாக இருப்பாரா? என்று ரசிகர்கள் பயம் கலந்த சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காரணம் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இதனால் சென்னை சிஎஸ்கே அணிகுறித்து ரசிகர்கள் அதிக ஆர்வத்தை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அவரை இரண்டாவது இடத்தில் ரீடெய்ன் செய்திருப்பது குறித்து ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்தி வந்தனர்.

இதையடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கேவிற்கு தோனியே கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் புதிய கேப்டன் நியமிக்கப்படும் முடிவு கைவிடப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.