close
Choose your channels

சுரேஷ் ரெய்னாவை அடுத்து தீபக் சஹாரும் நாடு திரும்புகிறாரா? என்ன ஆச்சு சிஎஸ்கே அணிக்கு?

Saturday, August 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுரேஷ் ரெய்னாவை அடுத்து தீபக் சஹாரும் நாடு திரும்புகிறாரா? என்ன ஆச்சு சிஎஸ்கே அணிக்கு?

2020ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணி வீரர்களும் சமீபத்தில் துபாய் சென்றுள்ளனர். தனிமைப்படுத்துதல் காலம் முடிந்தவுடன் வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக சுரேஷ் ரெய்னா போட்டியில் இருந்து விலகி விட்டதாகவும் அவர் இந்தியா திரும்பி விட்டதாகவும் செய்தி வெளிவந்தது. இதனை அடுத்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான தீபக் சஹாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் ஒருவருக்கும், 12 உதவியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது முன்னணி ஊடகம் ஒன்று அந்த ஒரு வீரர் தீபக் சஹார் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை உறுதி செய்யவில்லை.

ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தீபக் சஹார் இந்தியா திருப்பி அனுப்பப்படுவார் அல்லது துபாயிலேயே கொரோனா நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வார் என தெரிகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் எதிர்பாராத காரணத்தினால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் தொடரும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.