சிஎஸ்கே வீரரின் திருமண புகைப்படங்கள் வைரல்.. மணமகளும் கிரிக்கெட் வீராங்கனை தான்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு நேற்று திருமணம் நடந்ததை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார். இந்த நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலியான உத்கர்ஷா பவார் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

மகாராஷ்டிராவில் நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ருத்ராஜ் மற்றும் உத்கர்ஷா திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நேற்று இவர்களது திருமணம் பெரியவர்களின் ஆசியுடன் நடந்துள்ளது.

மணமக்கள் திருமண உடையில் பளபளப்பாக இருந்ததும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி இருந்ததும் இந்த திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்களில் இருந்து தெரிய வருகிறது.

மணமகள் உத்கர்ஷா ஒரு முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை என்பதும் அவர் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ருத்ராஜ் - உத்கர்ஷா திருமணம் நடந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

டென்மார்க் தீவில் ஜோதிகாவுடன் சூர்யா.. வைரல் புகைப்படம்..!

டென்மார்க் நாட்டில் உள்ள தீவில் சூர்யா மற்றும் ஜோதிகா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

'லியோ' படத்தின் வியாபாரம் தொடங்கியது.. வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் தற்போது இந்த படத்தில் வியாபாரம் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 

சாய் சுதர்சன் பற்றி தோனி அன்றே கணித்தார்- உடற்பயிச்சியாளர் ராஜாமணி

ராஜஸ்தான்  ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உடற்பயிச்சியாளர் ராஜாமணி அவர்கள் கிரிக்கெட்டர் அஸ்வின்

வணிகரீதியாக படம் எவ்வளவு வசூல் கொடுக்கிறது என்பதை நாம் பார்க்கக்கூடாது - மணிரத்தினம்

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023  நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது  .

இதையும் விட்டுவைக்கலையா? பாம்புடன் ஒரு Pre-Wedding போட்டோஷுட் நடத்திய ஜோடி!

திருமணம் செய்துகொள்ள இருக்கும் சிலர் தங்களது காதல் மற்றும் திருமணத்திற்கு முந்தைய நினைவுகளை சேகரித்து வைப்பதற்காக போட்டோஷுட் நடத்தி புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.