close
Choose your channels

சிஎஸ்கேவுல அந்த ரெண்டு பேர் கண்டிப்பா இருப்பாங்க: முத்து ஓபன் டாக்!

Monday, October 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கெத்தாக சாம்பியன் பட்டம் பெற்றது என்பதும் கடந்த ஆண்டு முதல் அணியாக வெளியேறிய போது மீண்டும் இதே வேகத்தில் திரும்பி வருவோம் என்று கூறிய தோனி, திரும்பி வந்தது மட்டுமின்றி திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அடுத்த வருடம் கூடுதலாக 2 அணிகள் ஐபிஎல் போட்டியில் புதிதாக இணைய இருப்பதால் அனைத்து அணிகளிலும் வீரர்களின் ஏலம் நடைபெறும். அப்போது ஒரு அணிக்கு இரண்டு அல்லது மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அவ்வாறு இரண்டு வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் நிலை வந்தால் தோனி தானே ஒதுங்கி விடுவார் என்றும் சிஎஸ்கே பொருத்தவரை தோனியின் விருப்பம் தான் முதலில் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் முத்து கூறியுள்ளார் மேலும் சிஎஸ்கே இருவரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் எந்த இரண்டு வீரர்களை தக்க வைத்து கொள்வார்கள் என்ற கணிப்பையும் முத்து கூறியுள்ளார். இதுகுறித்த முழு வீடியோ இதோ:

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.