close
Choose your channels

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு: கடலூரில் பரபரப்பு

Wednesday, April 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் ஒருவர் உயிரிழந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 30ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த அந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவரது ரத்தம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இன்னும் அவருக்கு கொரோனா என்பது குறித்த பரிசோதனையின் முடிவு வரவில்லை.

மேலும் அந்த பெண் சிறுநீரக பாதிப்புக்கும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடலூர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண் திடீரென சற்றுமுன் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த பெண் கொரோனாவால் உயிரிழந்தாரா? அல்லது சிறுநீரக பாதிப்பு காரணமாக உயிரிழந்தாரா என்பது பரிசோதனை முடிவுக்கு பின்னரே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.