தமிழகத்தில் ஊரடங்கா...! விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன...?

  • IndiaGlitz, [Thursday,April 08 2021]

தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த முக்கிய செய்திகள் வெளியாகி உள்ளது.

கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பொதுமுடக்கம் வருமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் கிளம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள கொரோனா பாதிப்புகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 12 மாநிலங்களின் முதல்வர்களுடன், பாரத பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் உரையாடல் நடத்தவுள்ளார். கொரோனாவின் தாக்கம், பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதில் பேசவுள்ளனர். இதில் தமிழகம் சார்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்க உள்ளார்.

சுகாதாரத்துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள்:

வரும் சனிக்கிழமை முதல் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்

• தமிழகத்தில் கட்டாயமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது.

• ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது போலத்தான், படிப்படியாக கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படும்.

• இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என்பது முதல் கட்டமாக அமல்படுத்தப்படும்.

• கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கண்காணிப்புகள் என்பது தீவிரமாக்கப்படும்.

• மால்கள், பார்க்குகள், கடற்கரை உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தடை விதிக்கப்படும்.

• திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

• முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

• கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருக்கும் மாநிலங்களிலிருந்து, தமிழகம் வருபவர்கள் கட்டாயமாக இ-பாஸ் எடுத்துவருவது அவசியமாகும்.

• திருமணநிகழ்வுகளில் 100 பேரும், துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி.

• வணிக வளாகங்களான பெரிய கடைகள் மற்றும் ஷோரூம்களில் 50% மட்டுமே அனுமதி.

• மாவட்டங்களுக்குள் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயமில்லை, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாகும்.

• ஆட்டோவில் செல்ல, ஓட்டுனரை தவிர இருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி. வாடகை வாகனங்களில் ஓட்டுனரைத்தவிர மூவர் மட்டுமே பயணிக்கலாம்.

• சின்னத்திரை மற்றும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு செல்பவர்கள், கொரோனா பரிசோதனை செய்து, தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாகும்.

• வழிபாட்டுத்தலங்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் அனுமதிக்க தடை. இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாட்டுத்தலங்களில் அனுமதி.

• நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சி எடுப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.

• பார்வையாளர்கள் இல்லாமல் மைதானங்களில் விளையாட்டுகள் நடைபெற அனுமதி.

• கேளிக்கை விடுதிகளிலும் 50% மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

• உணவுக்கடைகள் மற்றும் தேநீர்க்கடைகளில் 50% வாடிக்கையாளர்களுடன், இரவு 11 மணி வரை அமர்ந்து உணவு உண்ண அனுமதி.
 

More News

வைரலாகும் கே.எஸ்.ரவிகுமாரின் மகள்கள் புகைப்படம்!

தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் வாக்களிக்க திரையுலக பிரபலங்கள் பலர் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே. ரஜினிகாந்த், கமல்ஹாசன்

சதீஷ், பவித்ராவுக்கு நடராஜன் பதிவிட்ட டுவீட்!

நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி ஆகிய இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து யார்க்கர் கிங் நடராஜன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள டுவிட் தற்போது வைரலாகி வருகிறது 

நடிகை அஞ்சலிக்கு கொரோனா பாதிப்பா? அவரே அளித்த விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, பின்னர் குணமடைந்து

தனது குழந்தைகளுக்கு பெற்றோரை தேடும் அம்மா: ஏன்? 'சக்தீ' திரைப்படத்தின் வித்தியாசமான கதை!

ஒரு தாய் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்காக பெற்றோரை தேடும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட 'சக்தீ' என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி: 'கர்ணன்' தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஊரடங்கு உள்பட ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் தமிழக அரசு