கொரோனா அச்சம் எதிரொலி: சாலையில் இருந்த பணத்தை கண்டுகொள்ளாத பொதுமக்கள்

சாலையில் 10 ரூபாய் இருந்தாலே ஓடோடிச் சென்று எடுக்கும் பொதுமக்கள் தற்போது ஆயிரக்கணக்கில் சாலையில் பணம் இருந்தும் அதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த அதிசய சம்பவம் ஒன்று மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் என்ற பகுதியில் சாலையில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு கீழே சிதறிக் கிடந்தது. 20 ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய், 200 ரூபா மற்றும் அதில் 500 ரூபாய் நோட்டுக்கள் சாலையில் சிதறிக் கிடந்த நிலையில் அந்த பகுதியில் சென்ற பொது மக்களில் யாரும் அந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க முயற்சிக்கவில்லை. ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக எழுந்துள்ள அச்சம் காரணமாக இந்த பணத்தை யாரும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று கையுறை அணிந்து அந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். அதில் மொத்தம் 6 ஆயிரத்து 480 ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. சாலையில் இருந்த ரூபாயை எடுத்து கிருமிநாசினி உதவியால் சுத்தப்படுத்திய போலீசார், ‘இந்த பணத்திற்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என்றும் இருப்பினும் சிசிடிவி கேமரா மூலம் இந்த பணத்தை தவற விட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக சாலையில் இருந்த பணத்தைக் கூட பொதுமக்கள் கண்டு கொள்ளாத சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

ரசிகரின் வேண்டுகோளை ஏற்று டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

கொரொனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஊரடங்கிற்கு பின் இதை முக்கியமாக கவனியுங்கள்: யோகிபாபு அறிவுரை

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர்

ஊரடங்கு உத்தரவால் ஊருக்குள் வரும் காட்டு விலங்குகள்: செங்கல்பட்டு பகுதியில் பதட்டம்

காட்டு விலங்குகள் வாழும் பகுதியை மனிதன் ஆக்கிரமித்த நிலையில் தற்போது இந்த நிலைமை தலைகீழாகி ஊருக்குள் காட்டு விலங்குகள் வலம் வரத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகை காஜல் அகர்வால் செய்த மிகப்பெரிய நிதியுதவி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்களுக்கு, நலிந்த நடிகர்களுக்கு என பல்வேறு தரப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது

கொரோனா பரபரப்பிலும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: 3 பேர் கைது

உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கொரோனா வைரசால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே கொரோனவுக்கு எதிராக மீம்ஸ்களும், கொண்டாட்டங்களும் நடந்து வருவது