நிவர் புயல் கரையைக் கடந்தப் பின்பும் வட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!

 

நிவர் புயல் கரையைக் கடந்த பின்பும் சில வட மாவட்டப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்க தொடங்கியது. இந்த நிகழ்வு இன்று அதிகாலை 2.30 மணிவரை நீடித்ததாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது. இதனால் புயல் தற்போது முற்றிலும் வலுவிழந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் புயல் வலுவிழந்து வரும் நிலையிலும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. மேலும் தீவிரப்புயல் கரையைக் கடந்த பிறகு அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து சாதாரணப் புயலாகவும் அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும் ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும். அப்போது சூறாவளி காற்று மணிக்கு 65-75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது.

மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகளிலும் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் இந்தப் பகுதிகளில் வீடுகள் மற்றும் குடிசைகளின் மேற்கூரை பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பகுதிகளில் மின் இணைப்புகள் மற்றும் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்ககப் பட்டுள்ளது.

More News

நடன இயக்குனர் பிருந்தா படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்!

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் 'ஹே அனாமிகா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

ரசிகர்களை இழக்கிறாரா ரம்யா பாண்டியன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் போட்டியாளர் ரம்யா மட்டுமே. குறிப்பாக சுரேஷ் சக்ரவர்த்தி இடமிருந்து எவிக்சன் பாஸை திறமையாக பெற்று

வாங்க நாம பிக்பாஸ்க்கு போவோம். தமிழ் ஹீரோவை அழைக்கும் பிரேம்ஜி அமரன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் கடந்த சீசன்களில் உள்ள விறுவிறுப்பு இந்த சீசனில் குறைவு என்றே பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ரியோ-ஆஜித் கால்சென்டர் உரையாடலை கலாய்க்கும் ரம்யா!

பிக்பாஸ் வீட்டில் தற்போது கால்சென்டர் டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதற்கு முன்னர் பாலாஜி-அர்ச்சனா, சனம்-சம்யுக்தா, ரம்யா-ஜித்தன் ரமேஷ் மற்றும் கேபி-சோம் ஆகியோர்களின் உரையாடல் நடைபெற்றது

நிவர் புயல் கரையை கடந்தது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு சரியாக 11.30 மணி முதல் அதிகாலை 2 30 மணி வரை