டவ்-தே புயலால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? தமிழகத்திற்கும் பாதிப்பா?

டவ்-தே புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தறபோது கேரள மாநிலத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் மீனவர்கள் வரும் 17 ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலைக்கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பின்பு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறி தற்போது புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் வரும் மே 18 ஆம் தேதி குஜராத் அருகே கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் கேரளா, தமிழகம், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இந்நிலையில் டவ்-தே புயலின் தாக்கத்தினால் தமிழகத்தில் நீலகிரி, தேனி, ஈரோடு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் எனவும் சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பொழியும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மேலும் டவ்-தே புயல் காரணமாக கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் வரும் 18 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அரபிக்கடலில் டவ்-தே புயல்… எப்போது கரையைக் கடக்கும்? பாதிப்பு யாருக்கு?

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியுள்ளது.

தமிழகத்தில் திரைத்துறை பணிகள் ரத்து: ஆர்கே செல்வமணி பேட்டி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதும், நேற்றும் தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

நேற்று ரூ.25 லட்சம், இன்று ரூ.10 லட்சம்: தல அஜித்துக்கு குவியும் வாழ்த்து!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால் தமிழக அரசுக்கு தாராளமாக நிதி கொடுத்து உதவி செய்ய வேண்டும்

WAR ROOMஇல் இருந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள டிஎம்எஸ் வணிக வளாகத்தில் WAR ROOM எனப்படும் கட்டளை மையம் ஒன்று இயங்கி வருகிறது.

பிரபல நடிகரின் மனைவில் தூக்கில் தொங்கி தற்கொலை: திருமணமான ஒன்றரை வருடத்தில் விபரீதம்!

பிரபல நடிகர் ஒருவரின் மனைவி திருமணமான ஒன்றரை வருடத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது