ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிலிண்டர் வெடிப்பு… கோவையில் நடந்த கொடூரம்!

  • IndiaGlitz, [Saturday,May 22 2021]

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத வகையில் தொடர்ந்து தமிழக மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளின் முன்பு ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளிகள் பல மணிநேரமாகக் காத்து கிடக்கின்றனர்.

இப்படி கோவை அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து அதனால் பலத்த தீ ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அருகில் இருந்த தீயணைப்பு வீரர்கள் அந்தத் தீயை துரிதமாக அணைத்ததாகவும் இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தொடர்ந்து பல்வேறு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் தோறும் இந்த சிறப்பு சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டு வந்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடர்ந்து காத்துக் கிடக்கின்றன. அதிலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல மணிநேரமாக தொடர்ந்து வெயிலில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இப்படி கோவை அரசு மருத்துவமனை முன்பு அதிக சூடு காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து அதனால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து அதிகாரிகளும் நோயாளிகளும் பதற்றம் அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தடுப்பூசி போட்டுகிட்டா காரக்குழம்பு சாப்பிடக்கூடாதாம்: கனியை கலாய்த்த நெட்டிசன்

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனின் டைட்டில் வின்னராக கனி வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து கனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது

கடும் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு: மருத்துவர் குழு பரிந்துரை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இரண்டு வார ஊரடங்கு நாளை மறுநாள் உடன் முடிவுக்கு வருவதை அடுத்து இந்த ஊரடங்கை நீடிப்பதா? வேண்டாமா?

தனக்குத்தானே 144 விதித்துக் கொண்ட கிராமம்! குவியும் பாராட்டு!

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த கிராமம் ஒன்று தனக்குத்தானே 144 ஊரடங்கு விதித்துக் கொண்டு இருப்பது கடும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மோகன்லாலுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித் நாயகி!

அஜித் நடித்த 'வரலாறு' என்ற திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவர் மோகன்லாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அவருக்கு தனது பிறந்தநாள்

போற போக்குல எடுக்கும் பட அல்ல அந்த படம்: நெட்டிசன் கேள்விக்கு சேரன் பதில்!

கடந்த 1997ஆம் ஆண்டு 'பாரதி கண்ணம்மா' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். அதன் பின்னர் இவர் 'ஆட்டோகிராஃப்' உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார்