டி.இமானின் வாழ்த்துக்களை பெற்ற 13 வயது பிரபலம்!

  • IndiaGlitz, [Monday,July 27 2020]

கேரளாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஆதித்யா சுரேஷ் என்பவர் இந்த சின்ன வயதிலேயே பாடுவதில் திறமையுள்ளவர் என்பதும், அவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளது என்பதும், பல இசை மேடைகளில் அவர் பங்குபெற்று ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறக்கும்போதே மாற்றுத்திறனாளியாக பிறந்த ஆதித்யா சுரேஷ் குறித்து அவரது பெற்றோர்கள் கவலைப்பட்ட நிலையில் தற்போது அவரது இசைத்திறமையை உலகமே பாராட்டுவதால் ஆதித்யா சுரேஷால் அவர்கள் பெருமையடைந்து வருகின்றனர். இதுவரை கேரளாவில் மட்டும் 400 மேடைகளில் பாடியுள்ளதாகவும், இந்தியாவின் ஒருசில நகரங்களுக்கும் சென்று பாடியுள்ளதாகவும் தெரிவித்த ஆதித்யா சுரேஷ், சவுதி அரேபியாவில் பாட வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் கொரோனா காரணத்தால் அந்த நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காந்த கண்ணழகா’ என்ற பாடலை அனிருத் மற்றும் நீதிமோகன் பாடியிருந்தனர். இரண்டு பேர் பாடிய இந்த பாடலை ஆதித்யா சுரேஷ் தனியாளாக பாடி அசத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகிய நிலையில் இந்த வீடியோவை பார்த்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ இசையமைப்பாளர் டி இமான், ஆதித்யா சுரேஷுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

More News

தமிழகத்தில் இன்று 6993 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரு லட்சத்தை நெருங்கிய சென்னை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களாக 7 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று 5வது நாளாகவும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது

தல அஜித்துக்கு பாட்டு எழுதணும்: தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரின் ஆசை

தமிழ்நாட்டின் முதல் பெண் ஓட்டுனர் என்ற புகழைப் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாரதா என்பவர் தல அஜித் அவர்களின் படத்திற்கு அறிமுக பாடலை எழுத வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டுள்ளார் 

இந்தியாவின் கனவு நாயகன்… நினைவு தினம் இன்று!!!

இந்தியாவின் வல்லரசு கனவை இளைஞர்கள் மத்தியில் விதைத்த எழுச்சி நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.

ஏழைச் சிறுவனின் கல்விக்கு கைக்கொடுக்கும் இளம் காவல் அதிகாரி!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் உள்ள பலாசியா காவல் நிலையத்தில் பணியாற்றும் இளம் காவல் அதிகாரி வினோத் தீக்ஷித்

அமிதாப் குடும்பத்தின் இருவர் டிஸ்சார்ஜ்: ரசிகர்கள் வாழ்த்து

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்