சூர்யாவுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்

  • IndiaGlitz, [Monday,December 23 2019]

நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள 38வது திரைப்படமான ’சூரரைப்போற்’று என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் 40வது படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமான செய்தி சமீபத்தில் வெளிவந்தது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் சூர்யாவின் 39வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் பணிபுரியும் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு டி இமான் இசை அமைப்பார் என தெரிகிறது. ஏற்கனவே ரஜினியின் ‘தலைவர் 168’ உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு டி.இமான் இசையமைத்து வரும் நிலையில் தற்போது முதல்முறையாக சூர்யாவுடன் அவர் இணைந்துள்ளார்.

சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவான திரைப்படங்களில் தேவிஸ்ரீபிரசாத், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா ஆகியோர்களே இதுவரை இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

திருமணமான சில நாட்களில் 100 பவுன் நகைகளுடன் காதலனுடன் மாயமான மணப்பெண்!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரு சில நாட்களில் காதலனுடன் 100 பவுன் தங்க நகையுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலக நாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதுமா? ஹெச்.ராஜா

குடியுரிமை சட்டம் குறித்து சமீபத்தில் கருத்து கூறிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், 'வாக்கு வங்கிக்காக குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது

டி.ராஜேந்தருக்கு கிடைத்த அசத்தலான வெற்றி!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. 

உதயநிதியின் 'வசதியான வயதானவர்' டுவீட்டுக்கு ராதாரவியின் பதில்!

திமுக இளைஞரணி  செயலாளரும் நடிகருமான உதயநிதி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் 'தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் குடியுரிமை

என் பேச்சிற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சம்மந்தமில்லை: ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியதில் இருந்து அவர் மீது அதிக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.