close
Choose your channels

திருமூர்த்தியும் ஷங்கர் மகாதேவன் மகனும் எனக்கு ஒன்றுதான்: டி.இமான்

Sunday, February 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீவா நடித்த ’சிறு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் டி இமான் கலந்துகொண்டு பல சுவாரசிய தகவல்களை அளித்தார்.

குறிப்பாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை சமூக வலைத்தளத்தில் பாடி புகழ் பெற்ற மாற்றுத்திறனாளி திருமூர்த்தி அவர்கள் இந்த படத்தில் ஒரு பாடலை பாடி இருப்பதாகவும் அவருக்கு இன்னும் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்து கொண்டிருப்பதாகவும் அவருடைய வளர்ச்சியை பார்த்து தான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவதாகவும் டி இமான் தனது பேச்சில் கூறினார்.

அதேபோல் ராஜ கணபதி என்பவர் இந்த படத்தில் பாடகராக அறிமுகம் ஆகி உள்ளார் என்றும் மேலும் பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம்மகாதேவனும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளதாகவும் கூறினார்.

மேலும் எனக்கு ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்து விட்டால் திருமூர்த்தியும் ஒன்றுதான் சங்கர் மகாதேவனின் மகனும் ஒன்றுதான் என்றும் கலைஞர்களில் எந்த வித வித்தியாசத்தையும் நான் பார்த்ததில்லை என்றும், என்னதான் சங்கர் மகாதேவனின் மகனாக இருந்தாலும் ஒன் டூ த்ரி என்று கூறியவுடன் ஸ்ருதியோடு பாடவில்லை என்றால் அவர் ஜீரோ தான் என்றும் இங்கே திறமைக்கு மட்டுமே மதிப்பு என்றும் டி.இமான் தனது பேச்சில் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos