காறி துப்பிடுவேன்: வனிதா விவகாரத்தில் கோபப்பட்ட ராபர்ட்

நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்தத் திருமணம் பீட்டர்பால் முதல் மனைவியால் சர்ச்சைக்குள்ளாகி இது குறித்த செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் வெளிவந்தது. ஒரு கட்டத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பையும் மீறி வனிதா திருமண செய்திகள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வீடியோ ஊடகம் ஒன்றில் வனிதாவுடன் நெருக்கமாக இருந்த டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை வனிதா வனிதாவின் மூன்றாவது கணவர் என்று குறிப்பிட்டு, வனிதாவின் புதிய திருமணம் குறித்து அவர் கொந்தளித்ததாகவும் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவை பார்த்த டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மிகவும் ஆத்திரமடைந்து ஒரு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் வனிதாவுடன் தான் உதவி செய்யும் நோக்கில் பழகியதாகவும், ஆனால் அவருடைய உண்மையான குணம் தெரிந்து ஒதுங்கிவிட்டதாகவும், தன்னை 3வது கணவர் என்று குறிப்பிட்டதே தவறு என்றும் மேலும் நான் கொந்தளித்ததாக ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும் வனிதா திருமணம் குறித்து தான் எந்தவிதமான கருத்துக்களையும் கூறாத நிலையில் இப்படி பொய்யான செய்திகளை பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக பதிவு செய்து வருகின்றனர் என்றும், நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும், வனிதாவும் அவருடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும், ஆனால் இடையில் இருக்கும் இது மாதிரி ஒரு சில ஊடகங்கள் அறிவே இல்லாமல் செய்தி வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோவை பதிவு செய்தவரை நேரில் பார்த்தால் காறித் துப்பிவிடுவேன் என்று கோபப்பட்டு ராபர்ட் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது