close
Choose your channels

சினிமா வாய்ப்பை நம்பி வாழ்க்கையை தொலைத்த மாணவி! திடுக்கிடும் தகவல்

Saturday, May 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடனப்பள்ளி மாணவர் ஒருவர் சினிமா வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறிய நடன இயக்குனரை நம்பியதால் இன்று பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வாழ்க்கையையே தொலைத்த திடுக்கிடும் சம்பவம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்ற பகுதியில் நடந்துள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை என்ற பகுதியில் நடனப்பள்ளி நடத்தி வரும் அபிஅஜித் என்பவரிடம் ஒரு மாணவி நடனம் பயில வந்துள்ளார். அவருடைய நடனத்திறமையை பார்த்த அபி அஜித், அவருக்கு சினிமா வாய்ப்பு பெற்று தருவதாக கூறியுள்ளார். சில நாட்கள் கழித்து திருச்செந்தூருக்கு ஒரு சினிமா இயக்குனர் வந்திருப்பதாகவும், அவரிடம் அறிமுகம் செய்து வாய்ப்பு பெற்று  தருவதாகவும் ஆசை காட்டிய அபி அஜித், மாணவியை அழைத்து கொண்டு சென்றுள்ளார். ஆனால் தனது நண்பர் ஒருவரை சினிமா இயக்குனர் என்று கூறி நண்பரும் அவரும் சேர்ந்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 

இந்த நிலையில் மாணவியை காணவில்லை என்று அவர் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவியை போலீசார் தேடி வந்தனர். ஒருவருடம் கழித்து இராஜபாளையத்தில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் நடனம் ஆடிய அபி அஜித்தையும் அந்த மாணவியையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது மாணவி கூறிய வாக்குமூலத்தில் தனக்கு சினிமா வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பலமுறை தன்னிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னை வெளியே எங்கும் செல்லவிடாமல் அபிஅஜித் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். 
 

இதனையடுத்து மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் அபிஅஜித்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பொய்யான நபர்களிடம் சிக்கி சினிமாவில் சேரும் ஆசையால் வாழ்க்கையை தொலைத்துவிட்ட இந்த மாணவி, சினிமா ஆசையால் இருக்கும் பலருக்கு ஒரு உதாரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.