கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து மரணம்? அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Monday,March 01 2021]

சுவிட்சர்லாந்தில் ஃபைசர்-பயோன் டெக் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியும் தற்போது பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொண்ட 16 பேர் கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரக் குழு தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தத் தகவலால் உலக நாடுகள் முழுக்க கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

கொரோனா தடுப்பூசிகளை தற்போது பெரும்பாலான உலக நாடுகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டன. இதனால் கொரோனா பீதியில் இருந்து பொதுமக்கள் ஓரளவு விடுப்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்து இருப்பது கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழந்தவர்கள் அனைவரும் 86 வயதைத் தாண்டியவர்கள் என்றும் அவர்களுக்கு ஏற்கனவே நீரிழிவு போன்ற வேறுநோய் பாதிப்புகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்ற தகவலை ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. இதில் பெரும்பாலும் மரணங்கள் இல்லாத நிலையில் தற்போது மாடர்னா மற்றும் ஃபைசர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 16 பேர் உயிரிழந்து இருப்பது பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. மேலும் அந்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 364 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் 199 பேர் ஃபைசர் தடுப்பூசியும் மற்ற 154 பேர் மாடர்னா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை உலகம் முழுக்க கொரோனா வைரஸால் 11 கோடியே 46 லட்சத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 25 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு 55 லட்சத்தை தாண்டி, உயிரிழப்பு 10 ஆயிரத்தை எட்டி இருக்கிறது. தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறை அந்நாட்டில் தீவிரப்படுத்தப் பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 16 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் அந்நாட்டு மக்களிடையே சிறு பதற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

தலைக்கு ஏறிவிட்ட போதை… தன் ஆண்குறியை தானே வெட்டி எறிந்த பரிதாபம்!

ஜெர்மனியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் மயங்கிய நபர் ஒருவர் தன்னுடைய ஆண் உறுப்பை தானே வெட்டி எறிந்த பரிதாப நிகழ்வு நடந்து உள்ளது.

சூப்பர்ஹிட் பாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் ஆர்ஜே பாலாஜி! கே.பாக்யராஜூடன் பேச்சுவார்த்தை!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்றை ரீமேக் செய்ய ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது இது குறித்து பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் உடன்

முக ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய ரஜினிகாந்த்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள்,

லெஜண்ட் சரவணன் படத்தின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பு: வைரல் புகைப்படங்கள்!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது

மீண்டும் இளமைக்கு திரும்பிய விஜய்சேதுபதி: வைரலாகும் போட்டோஷூட்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எந்தவித திரையுலக பின்னணியும் இல்லாமல் தனது திறமையின் மூலம் மட்டுமே படிப்படியாக முன்னேறி தற்போது மாஸ் நடிகர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.