இந்த ஏரியின் அருகே ஒரு மணி நேரம் நின்றாலே மரணம் நிச்சயம்!

  • IndiaGlitz, [Saturday,April 20 2019]

இயற்கை மனிதர்களை பல்வேறு வகையில் பாதுகாத்து வந்தாலும், மனிதர்கள் செய்யும் தவறுகளால், விஷய தன்மை கொண்டதாக மாறி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது. அப்படித்தான் முற்றிலும் விஷமாக மாறி உள்ளது ஒரு ஏரி.

மத்திய ரஷ்யாவின் தெற்கு யூரல் மலையில், அமைந்துள்ளது அழகும் விஷத்தன்மையும் கொண்ட கரசோ ஏரி விஷத்தன்மை கொண்டதாக மாறியதற்கு முழு காரணமும், இயற்கைக்கு மனிதன் செய்த துரோகம் தான்.

நீர் ஆதாரத்திற்காக பயன்படக்கூடிய ஏரியை, குப்பை கொட்டும் தொட்டியாக மாற்றி கழிவுகளை ஏற்றி, அதன் தன்மையை மாற்றி தற்போது விஷமாய் மாறிக் காட்சி அளிக்கிறது இந்த ஏரி.

1951 ஆம் ஆண்டு, முதல் சோவியத் ஒன்றியத்தால் அணுசக்தி கழிவுகளை கொட்டும் இடமாக இந்த ஏரி பயன்படுத்தப்பட்டுள்ளது. அசாதாரணமான அளவு அணுசக்தி, கழிவுகளை இந்த ஏரியில் கொட்டியதன் விளைவாக இன்று மனிதர்கள் இந்த ஏரியின் பக்கம் சென்றாலே உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் 1957 ஆம் ஆண்டு, இந்த ஏரியின் அருகே அமைந்திருந்த அணுசக்தி ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து காரணமாக ஏராளமான கதிரியக்க துகள்கள் ஏரியில் கலந்தது. இதனால் ஏரியில் உள்ள நீர் கதிரியக்கம் கொண்டதாக மாறியது.

இதனால் இந்த ஏரியின் அருகே ஒரு மணி நேரம் நின்றாலே மனிதர்களின் உயிர் போகும் அளவிற்கு விஷத் தன்மை கொண்டதாக மாறி உள்ளது. இந்த ஏரிக்கு செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News

பொது இடத்தில், கணவரை ஷூ லேஸ் கட்ட வைத்த நடிகை சோனம் கபூர்! வைரலாக பரவும் புகைப்படம்!

பொது இடத்தில் கௌரவம் பார்க்காமல், பிரபல நடிகைக்கு அவருடைய கணவர் ஷூ லேஸ் கட்டி விட்ட சம்பவம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனையா?

தாய்லாந்து நாட்டில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பெற்ற குழந்தைகளை பட்டினி போட்ட தம்பதிக்கு ஆயுள்தண்டனை

அமெரிக்காவில் பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு சித்ரவதை செய்த பெற்றோருக்கு ஆயுள்தண்டனை கிடைத்துள்ளது. 

தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்... துடிக்கத் துடிக்க உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்ட19 வயது மாணவி!

பங்களாதேஷில் தலைமை ஆசிரியர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என போலீசில் புகார் கொடுத்த மாணவியை சிலர் துடிக்க, துடிக்க, உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் அதிகாரி திடீர் மாயம்: மேற்குவங்கத்தில் பரபரப்பு

மேற்குவங்க மாநிலத்தில் வரும் 29ஆம் தேதி நான்கவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நாடியா என்ற தொகுதியின் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த அர்னாப் ராய் என்பவர் திடீரென மாயமாகியுள்ளதால்