கேபிள் டிவியில் ஒளிபரப்பான 'தர்பார்': அதிர்ச்சியில் படக்குழு!

  • IndiaGlitz, [Monday,January 13 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கடந்த நான்கு நாட்களில் 128 ரூபாய் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இருப்பினும் ஒருசில நெகடிவ் விமர்சனங்கள் மற்றும் இந்த படத்தை ஓட விடாமல் செய்ய வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த படத்தை ஒளிபரப்ப இருப்பதாக மிரட்டல்கள் ஆகியவை வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து போலீஸ் புகார் ஒன்று லைக்கா நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மதுரையில் உள்ள ஒரு லோக்கல் கேபிள் டிவி சேனலில் ‘தர்பார்’ திரைப்படத்தை ஒளிபரப்பி இருப்பதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் கண்டுபிடித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களே ஆகியுள்ள நிலையில் கேபிள் டிவி படத்தை ஒளிபரப்பியவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

இதை மட்டும் என்னை யாராலும் செய்ய வைக்க முடியாது: வெற்றிமாறன்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படத்தின் நூறாவது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்

'அசுரன்' பட விழாவில் கிண்டலடிக்கப்பட்ட விஜய்: நாகரீகமாக நடந்து கொண்ட தனுஷ்!

தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த வயதில் எங்களை எதிர்க்காதீர்கள். உங்களுக்கு நல்லதில்லை...! ம.பி முதல்வரை எச்சரித்த அமித்ஷா.

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் எனக் கமல்நாத், உரத்த குரல் எழுப்புகிறார். கமல்நாத் ஜி, நீங்கள் குரல் எழுப்புவதற்கான வயது இது இல்லை. கத்த வேண்டாம்.

நீங்கள் ஒரு முட்டாள்..! பிரதமருக்கு எதிராக கிளம்பியுள்ள ஆஸ்திரேலிய மக்கள்.

காட்டுத்தீயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களான நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பாதிப்புகளை பார்வையிட்டு வரும் மோரிசன் மக்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு எதிர்க்கப்பட்டு வருகிறார்.

சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த நடிகை கைது..!

சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரை அடுத்து போலீஸார் நடத்திய சோதனையில் பாலிவுட் நடிகை மற்றும் மாடல் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.