close
Choose your channels

'தர்பார்' படத்தில் ரஜினி சொன்ன கரெக்சன்: மீண்டும் படப்பிடிப்பா?

Sunday, December 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை என்பதால் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை விறுவிறுப்பாக படக்குழுவினர் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினிகாந்த் இரண்டாம் பாதியில் ஒரு இடத்தில் ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து கூறியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட ஏஆர் முருகதாஸ் அந்த பாடலின் படப்பிடிப்பை நேற்று முதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு காரணமாக ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இருந்த நிலையில் ஓரிரு நாட்கள் தள்ளிப் போகும் என்றும் கூறப்படுகிறது.

அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக வெளிவரும் படம் ’தர்பார்’ என்பதால், இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தின் மீது மிகுந்த அக்கறை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ரஜினிகந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.