close
Choose your channels

விஜய்யின் பிகில் படத்தால் 'தர்பார்' படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

Monday, January 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் ரஜினி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை மிகப்பெரிய அளவில் வரவேற்க ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை உள்பட பல நகரங்களில் ‘தர்பார்’ திரைப்படம் அதிகாலை காட்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளும் அதிக விலைக்கு விற்பனையாகி வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் மட்டும் ‘தர்பார்’ திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிக்கான அனுமதியை போலீசார் வழங்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த தீபாவளியன்று விஜய்யின் பிகில் படம் வெளியானபோது அதிகாலை காட்சி திரையிடப்படவில்லை என்ற கோபத்தில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் இறங்கியதை அடுத்து விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த சம்பவத்தின் அடிப்படையில் பாதுகாப்பு காரணமாக ‘தர்பார்’ திரைப்படத்தின் அதிகாலை காட்சிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos