புரண்டு கதறி அழுத பெற்றோர்....! இரக்கமில்லாமல் பரிதவிக்க விட்டு சென்ற மகள்....!

  • IndiaGlitz, [Friday,August 27 2021]

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா பகுதியில் உள்ள தாண்டாகவுண்டம்பாளையம் என்ற ஊரில் வசித்து வருபவர் தான் பச்சியப்பன், சிந்தாமணி தம்பதி. 12-ஆம் வகுப்பு முடித்துள்ள இவர்களது மகள் பவதாரணியும், அதே பகுதியில் உள்ள மணி என்ற 25 வயதுடைய இளைஞரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால், பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், 18 வயது நிரம்பிய தாரணி வீட்டை விட்டு வெளியே வந்து மணியை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன்பின்பு இந்த காதல் ஜோடி கடந்த செவ்வாயன்று நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளது.

கடந்த வியாழன்று இருவரையும் நாமக்கல் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் காவல் துறையினர். நீதிபதி விஜயன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்ட போது, தாரணி தன் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். சட்டப்படி திருமண வயதை இருவரும் அடைந்துவிட்டதால், திருமணம் செய்வது அவரவர் விருப்பம் என்று கூறி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் காதல் ஜோடியை வாகனத்தில் போலீசார் அழைத்து செல்லமுயன்ற போது, தாரணியின் தந்தை பச்சியப்பனும், தாய் சிந்தாமணியும் அழுது புரண்டு போராடியுள்ளனர். ஒரு வேளை அழுது அழைத்தால் கூட பெண் வந்துவிடமாட்டாளா என்ற ஏக்கத்தில் தாய், வாடா சின்னப்பையா என்று கூறி அழுதுள்ளார். போலீஸ் வாகனத்தின் முன்பு அழுது புரண்ட சிந்தாமணியை பெண் காவலர்கள் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். ஆனால் பச்சியப்பன் காரின் பம்பரை பிடித்து, கதறி அழுது மகளை அழைத்துள்ளார். இதை கண்டுகொள்ளாமல் மகள் காரினுள், கணவருடன் அமர்ந்துள்ளார். இதனால் போலீசார் மற்றொரு வாகனத்தில் காதல் ஜோடியை அழைத்து சென்றுள்ளனர். இதன்பின்பு பெற்றோர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். திடீரென்று இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில், கோர்ட் வாசலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்த்திய பெற்றோர், கதறி அழுததை பார்த்துக்கூட கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார் கல்நெஞ்சம் கொண்ட இளம்பெண். இந்த நிகழ்வு அருகில் இருந்தவர்கள் மற்றும் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கணும்போல: சிவகார்த்திகேயன் டுவிட்

நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் சிவகார்த்திகேயன், நாங்க இனிமேல் சங்கத்துக்கு இனி வேற செயலாளர் தான் பாக்கணும் போல

பாகுபலி ரேஞ்சில் ரன் ரேட்டிங்? 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி யாருக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்த் தொடர் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு': அட்டகாசமான செகண்ட் லுக்

சிம்பு நடிப்பில், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே

5 மொழிகளில் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஏற்கனவே சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்து வரும் நான்கு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியானது

காபூல் விமான நிலையத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு… உயரும் பலி எண்ணிக்கை!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.