விபூதி குங்குமப் பொட்டுடன் தமிழராக மாறிய வார்னர்: வைரலாகும் புகைப்படம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், இந்திய அணிக்கு நடராஜன் என்ற வேகப்பந்து வீச்சாளரை அடையாளர் காட்டியுள்ளார் என்பதும் தமிழரான நடராஜன் என்ற வேகப்பந்து வீச்சாளரை இந்திய அணிக்கு கண்டெடுத்து கொடுத்த டேவிட் வார்னருக்கு தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தனது திறமையை நிரூபித்த நடராஜன், தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து அணிக்கு இன்றியமையாத ஒரு வீரராக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய அணிக்கு ஒரு திறமையான, ஒரு தமிழரை அடையாளம் காட்டியதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நெட்டிசன் ஒருவர், டேவிட் வார்னரை ஒரு தமிழரைப் போல புகைப்படம் வரைந்துள்ளார். விபூதி குங்கும பொட்டுடன் அழகான மீசையும் வைத்து அந்த புகைப்படத்தை வார்னருக்கு அனுப்பி உள்ளார்

இந்த புகைப்படத்தை பார்த்து தான் மிகவும் சந்தோஷமடைந்து அடைந்ததாகவும், தனக்கு இந்த புகைப்படத்தை அனுப்பியவருக்கு நன்றி என்றும் வார்னர் சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழர் போன்று விபூதி குங்குமப் பொட்டு மற்றும் மீசையுடன் இருக்கும் வார்னரின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இன்னும் ஒரே ஒரு வாரம் தான்: ஜெயலலிதா நினைவு நாளில் கங்கனாவின் பதிவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் நான்கு வருடம் ஆகியுள்ள நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' என்ற படத்தில் நடித்து வரும் பிரபல

திருமணத்திற்கு காஜல் அகர்வால் ஒப்பந்தமான முதல் படம்: டைட்டில் அறிவிப்பு!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பதும், திருமணத்திற்குபின் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார்

சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா? கமல்ஹாசனின் ஆவேச வீடியோ!

சூரப்பா ஆட்சியாளர்களால் வேட்டையாடப்படுவது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோவில் அவர் ஆவேசமாக கூறியிருப்பதாவது:

அடுத்தடுத்து ஒரே நாளில் ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்… திடுக்கிடும் பின்னணி!!!

நேற்று மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில்  நடைபெற்ற அதிரடி சோதனையால் ரூ.4 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.

அமெரிக்காவில் பேமஸ் ஆன நம்ம ஊரு ரசம்!!! எப்படி தெரியுமா???

கொரோனா நேரத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டல் நிறுவனம் அந்த ஊரின் நோயாளிகளுக்கு இம்யூனிட்டி சூப் எனும் பெயரில் நம்ம ஊரு ரசத்தை பரிமாறியது.