close
Choose your channels

இவரை என்னால் பாராட்டால் இருக்க முடியாது: நடராஜன் குறித்து ஆஸ்திரேலிய வீரர்!

Wednesday, December 9, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக யார்க்கர்கள் வீசி புகழ்பெற்ற நடராஜன் தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக மாறியுள்ளார்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நடராஜனின் அபாரமான பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்ததாக கேப்டன் விராத் கோஹ்லியும், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 

இந்த நிலையில் நடராஜனின் திறமையை வெளிக்கொண்டு வந்த ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர், நடராஜனுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு செய்துள்ளார் 

களத்தில் இருக்கும் போது ஒவ்வொரு வீரரையும் நாங்கள் மதிக்கின்றோம். நாங்கள் தொடரை இழந்த போதிலும் நடராஜனின் ஆட்டத்தை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் நல்ல விளையாட்டு வீரர். விளையாட்டை மிகவும் நேசிப்பவர். ஆஸ்திரேலிய பயணத்தில் இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். வார்னரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.