close
Choose your channels

கதறி கதறி அழும் சுரேஷ்: என்ன காரணம்?

Wednesday, October 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்று வரும் அரக்கர்கள் மற்றும் ராஜ வம்சத்தினர் டாஸ்க் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய இரண்டு புரமோவிலும் இருந்த காட்சிகள் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. குறிப்பாக சனம் ஷெட்டி ஆவேசமாகி, ‘வெளியே வாடா’ என்று சுரேஷை கூறியது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சற்று முன் வெளியான மூன்றாவது புரமோவில் சுரேஷ், கன்ஃபக்சன் அறைக்கு சென்று கதறி கதறி அழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்னை கன்ஃபக்சன் அறைக்கு அழையுங்கள் என்று சுரேஷின் வேண்டுகோளை அடுத்து கன்ஃபக்சன் அறைக்கு அழைத்த பிக்பாஸ், அவரிடம், ‘சுரேஷ் நீங்கள் தெரிந்து தான் செய்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார்

அதற்கு சுரேஷ், ‘சத்தியமாக இல்லை என்றும், எந்த காரணத்தை முன்னிட்டும் நான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் அவ்வாறு செய்வதாக இருந்தால் நேரடியாக செய்திருப்பேன் என்றும் அவர் கூறினார். அதன்பின் அவர் கதறி அழுத அவர், ‘என்னை வச்சு கார்னர் செய்கிறார்கள் என்றும்,  நிறைய விஷயங்கள் என் காதில் விழுந்தும், நான் அமைதியாக நானாக இருக்க முயற்சிக்கின்றேன்’ என்றும் கதறி அழுத காட்சிகள் இன்றைய நிகழ்ச்சியை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.