close
Choose your channels

நீ யார் கேட்குறதுக்கு? முதல்முதலாக பொங்கிய சம்யுக்தா

Tuesday, October 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு தங்கச்சுரங்கம் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் போட்டியாளர்கள் நான்கு நான்கு பேர்களாக குழுவாகச் சேர்ந்துகொண்டு தங்கத்தை சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரித்த தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். யார் அதிகமாக தங்கத்தை சேகரிக்கின்றார்களோ அவர்கள் வெற்றியாளர்கள்

இந்த டாஸ்க்கில் தங்கத்தை சேகரிக்க குழுவினர்கள் உள்ளே சென்று கொண்டிருந்தபோது ஒரு சிலருக்கு இடையில் திடீரென பிரச்சனை எழுகிறது. பாலாஜி, சனம்ஷெட்டி மற்றும் சம்யுக்தா ஆகியோர் மாறி மாறி குற்றஞ்சாட்டுகின்றனர். நீ யார் கேட்குறதுக்கு? என்று ஆவேசமாக சம்யுக்தா ஆவேசமாக கூறுகிறார். அவர் சனம் ஷெட்டியை பார்த்து கூறுகிறாரா? அல்லது பாலாஜியை பார்த்து கூறுகிறாரா? என்பது புரமோவில் சரியாக தெரியவில்லை. ஆனால் இதுவரை சம்யுக்தா அழகு பொம்மையாக அமைதியாக இருந்த சம்யுக்தா இன்று ஆவேசப்பட்டுள்ளார் என்றால் அவரை யாரோ சீண்டிவிட்டுள்ளனர் என்பதும் மட்டும் தெரிகிறது.

மொத்தத்தில் அமைதியாக இருப்பவர்கள் எல்லாம் ஆவேசப்பட்டு வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.