close
Choose your channels

ரஜினிக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் அளித்த வழக்கறிஞர்

Saturday, January 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரியார் குறித்து ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரபரப்பான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அசோக் என்ற வழக்கறிஞர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாவேன். கடந்த 22-ந்தேதி அன்று தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் திராவிட விடுதலைக் கழகம் சார்பில் உமாபதி என்பவர் தலைமையில் ரஜினிகாந்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காட்ட கூடியவர்கள் தான்.

அவர்கள் ரஜினிகாந்துக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்கள் எழுப்பிய கோஷம் பொது மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது. மேலும் அவர்கள் அளித்த பேட்டியில் ரஜினிகாந்துக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்தனர். ரஜினிகாந்தை தமிழ்நாட்டில் தெருவில் உயிரோடு நடக்க விட மாட்டோம் என்றும், அவர் கொல்லப்படுவார் என்றும் தெரிவித்தனர்.

இதனால் ரஜினிகாந்தின் உயிருக்கும், அவரது குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே குறிப்பிட்ட அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos