புதிய அரசு பொறுப்பேற்றவுடன் புதிய கோரிக்கை: திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,April 20 2021]

புதிய ஆட்சி அமைந்தவுடன் திரையரங்குகளுக்கான புதிய கோரிக்கைகள் கேட்கப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்குகளில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாலை காட்சியும் இரவு 8 மணிக்குள் முடிவடையும் வகையில் காட்சி நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து திரையரங்குகளில் காலை, மதியம், மாலை என மூன்று காட்சிகள் திரையிட முடிவு செய்திருப்பதாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் புதிய அரசு உருவான பிறகு இரவு காட்சிகளை மீண்டும் திரையிட கோரிக்கை வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல புதிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதும் ஏற்கனவே ரிலீசான திரைப்படங்கள் மட்டுமே தற்போது திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவதால் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…பொதுத் தேர்வு!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனின் வாயிலாகவே நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்ட சேத்தன் சகாரியா… அப்படி என்ன செய்துவிட்டார்?

முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் கால்பதித்து இருக்கும் இளம் வீரர் ஒருவரை ரசிகர்கள் அனைவரும் தல

போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கிய மியான்மர் ராணுவம்...!வெளியான புகைப்படம்....!

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருவதால், போராட்டக்காரர்களை அவர்கள் கடுமையாக தாக்கி வருகிறார்கள். 

ஜான்வி கபூரின் ஹாட் முத்தம்: இன்ஸ்டாவில் அவரே பதிவு செய்த புகைப்படங்கள்!

இந்திய லேடி சூப்பர் ஸ்டார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், 'தடக்' பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னரும் ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

குழந்தையாக இருக்கும்போது கொள்ளை அழகாய் இருக்கும் விஜய்டிவி ஜாக்குலின்: வைரல் புகைப்படம்

'கலக்கப்போவது யாரு' உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜய் டிவி ஜாக்குலின் தற்போது 'தேன்மொழி' என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடரில் அவரது